×

ஓட்டுக்கு துட்டா..ஒதைப்போம் : விவசாயிகள் எச்சரிக்கை

கொள்ளிடம்: ஓட்டுக்கு பணம் கொடுத்து விவசாயிகளின் வாக்குகளை வாங்க நினைத்தால் அது நடக்காது என்று பி.ஆர்.பாண்டியன் பேசினார். காவிரி டெல்டா மாவட்டங்களில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்னைகளும், தீர்வுகளும் என்ற தலைப்பில் அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் விவசாயிகள் குழுவினர் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகின்றனர். நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் நேற்று நடந்த பிரசாரத்தில் கலந்து கொண்டு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் பேசியதாவது:

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு பிரதமர் மோடி வந்து பார்க்க முடியவில்லை. தென்னை மரங்களை இழந்த விவசாயிகளுக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. தேர்தலுக்காக மட்டும் கூட்டணி அமைத்துக் கொண்டு ஓட்டு கேட்க வந்தால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் விளை நிலங்களை கைப்பற்றி பெட்ரோலிய மண்டலமாக அறிவித்து விவசாயிகளை வெளியேறு என்று சொல்லாமல் அறிவித்து விட்டனர். விவசாயிகளின் 46 கோரிக்கைகளை யார் ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்களுடன் சேர்ந்து செயல்படுவோம். பணம் கொடுத்து விவசாயிகளின் வாக்குகளை வாங்க நினைத்தால் விவசாயிகள் திருப்பி அடிப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tutu , Vote, push, farmers alert
× RELATED அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற...